Tirunelveli DCPU Recruitment 2025: தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் ( Assistant Cum Data Entry Operator ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Tirunelveli DCPU Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு |
பதவியின் பெயர் | உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் ( Assistant Cum Data Entry Operator ) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 06.05.2025 |
பணியிடம் | திருநெல்வேலி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tirunelveli.nic.in/ |
Tirunelveli DCPU Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பின்வரும் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
Tamilnadu DCPU Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலகு உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி படிப்பில் டிப்ளமோ அல்லது சான்று பெற்றிருப்பது அவசியம். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்புக்கான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்கவும்.
சம்பள விவரங்கள்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.13,240/- தொகுப்பூதியமாக வழங்கப்படும். சம்பளம் தொடர்பான மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தட்டச்சு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Tirunelveli DCPU Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் கொண்ட நபர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை https://tirunelveli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதைப் பிரிண்ட் அவுட் எடுத்து, சரியாக பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றுகளை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 06.05.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கொக்கிரகுளம் திருநெல்வேலி – 9. மேலும் தொடர்புக்கு: 0462 2901953
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |