Sivaganga DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை சிவகங்கை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள MMU ஊர்தி ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Sivaganga DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட நலவாழ்வு சங்கம் |
காலியிடங்கள் | 01 MMU ஊர்தி ஓட்டுநர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 08.05.2025 |
பணியிடம் | சிவகங்கை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sivaganga.nic.in/ |
Sivaganga DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட நலவாழ்வு சங்கம் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, பின்வரும் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பணியின் பெயர்: MMU ஊர்தி ஓட்டுநர்
- காலியிடங்கள்: 01
- மொத்தம் காலியிடங்கள்: 01
TN District Health Society Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, கனரக வாகனங்களை இயக்குவதற்கான சரியான ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
Tamilnadu DHS Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த வயது வரம்பிற்குள் இருக்க வேண்டியது முக்கியம்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ஊர்தி ஓட்டுநர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ₹.13500/- வழங்கப்படும். இது அடிப்படை ஊதியமாகும், இதர படிகள் அரசாங்க விதிகளின்படி வழங்கப்படலாம்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பில், ஊர்தி ஓட்டுநர் பதவிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.. இது தொடர்பான மேலும் விரிவான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Sivaganga DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை https://sivaganga.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர், விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய கையொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முத்தாண்டிக் கலைக் கல்லூரி அலுவல வளாக மேல்தளம், சிவகங்கை மாவட்டம். ஆட்சி அலுவலர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை. தொலைபேசி எண் 04575-240524.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலக முகவரிக்கு 08.05.2025 தேதிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அல்லது கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதி செய்து கொள்ளவும்.