Monday, May 19, 2025
Home10th Pass Govt Jobs10வது தேர்ச்சி/தோல்வி தமிழக அரசு பள்ளியில் சமையல் உதவியாளர் பணி! - தேர்வு கிடையாது! Nutrition...

10வது தேர்ச்சி/தோல்வி தமிழக அரசு பள்ளியில் சமையல் உதவியாளர் பணி! – தேர்வு கிடையாது! Nutrition Centers Tirupathur Recruitment 2025

Nutrition Centers Tirupathur Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆர்.சி.எம் நிதி உதவி உயர்நிலைப்பள்ளி உதயேந்திரம் பள்ளியில் காலியாக உள்ள 01 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு சத்துணவு துறை
காலியிடங்கள்01
பணிகள்சமையல் உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி15.05.2025
பணியிடம்திருப்பத்தூர் மாவட்டம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tirupathur.nic.in/

தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
சமையல் உதவியாளர்01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள்: தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும் (ஊராட்சி – ஒன்றியம் – வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை).

இந்த பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரையுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம் மற்றும் இதர தகுதிகள் அனைத்தும் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

வயது வரம்பு:

  • 21 முதல் 40 வரை (பொது மற்றும் தத்தெடுக்கப்பட்டோர்)
  • 18 முதல் 40 வரை (மறுமணம் புரிந்தவர்)
  • 20 முதல் 40 வரை (விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்)

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். அவ்வாறு பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு முதலில் ரூ.3000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 Level of Pay – ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://tirupathur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை 15.05.2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு 635804, இந்தியா

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments