Erode District Monitoring Unit Recruitment 2025: தமிழ்நாடு அரசின் ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின்கீழ், மாவட்ட கண்காணிப்பு அலகில் காலியாக உள்ள Young Professionals (இளம் தொழில் வல்லுநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Erode District Monitoring Unit Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் |
பதவியின் பெயர் | Young Professionals |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 16.03.2025 |
பணியிடம் | ஈரோடு – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | erode.nic.in |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Young Professionals (இளம் தொழில் வல்லுநர்) – 01 காலியிடங்கள்
கல்வித் தகுதி
- பொறியியல் பட்டம்: கணினி அறிவியல் (Engineering in CS) அல்லது தகவல் தொழில்நுட்பம்(IT) பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது)
- இளநிலை பட்டம்: தரவு அறிவியல் (Bachelor’s Degree in Data Science) மற்றும் புள்ளியியல் (Bachelor’s Degree in Statistics) பிரிவில் நான்கு ஆண்டு இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது)
- முதுகலை பட்டம்: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது இதற்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் Young Professionals பணிக்கு மாதம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Erode District Monitoring Unit Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலக வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் erode.nic.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை தங்களது கையொப்பத்துடன் இணைத்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் / தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 16.03.2025 மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Deputy Director of Statistics, District Statistical Office, Collectorate (6th Floor – Old Building), Erode District – 638 011. Application May Also Send Through Emial: [email protected]
முக்கிய தேதிகள்: விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 16.03.2025
மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- மேற்கண்ட தேதியை விட தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- அசல் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டாம்.