Monday, May 19, 2025
Home10th Pass Govt Jobsதமிழ்நாட்டில் 10வது படித்தவர்களுக்கு அரசு BOB வங்கியில் பியூன் வேலை - 500 காலியிடங்கள் ||...

தமிழ்நாட்டில் 10வது படித்தவர்களுக்கு அரசு BOB வங்கியில் பியூன் வேலை – 500 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.19,500! Bank of Baroda Recruitment 2025

Bank of Baroda Recruitment 2025: அரசுக்கு சொந்தமான பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 500 அலுவலக உதவியாளர் (பியூன்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்பேங்க் ஆஃப் பரோடா வங்கி
(Bank of Baroda)
காலியிடங்கள்500
பணிஅலுவலக உதவியாளர் (பியூன்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி23.05.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.bankofbaroda.in/

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • அலுவலக உதவியாளர் (பியூன்) – 500 காலியிடங்கள்

வகை வாரியாக / மாநில வாரியாக காலியிடங்கள்:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது, விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கானது.

வயது தளர்வு விவரங்கள்:

வகைவயது தளர்வு
SC / ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்

பேங்க் ஆஃப் பரோடா வங்கி அலுவலக உதவியாளர் பணியில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ. 19,500 – 37,815/- வழங்கப்படும். இது அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகள் அடங்கியதாக இருக்கலாம். சம்பளம் தொடர்பான மேலும் விரிவான தகவல்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. ஆன்லைன் தேர்வு
  2. உள்ளூர் வட்டார மொழித் தேர்வு (மொழித் திறன் தேர்வு)

இந்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பக் கட்டணம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

  • பெண்கள் / ST / SC / முன்னாள் ராணுவத்தினர் / PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 100/-
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ. 600/-

கட்டண முறை: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பேங்க் ஆஃப் பரோடா வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 03.05.2025 முதல் 23.05.2025 தேதிக்குள் https://www.bankofbaroda.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments