Thursday, March 20, 2025
Home8th Pass Govt Jobsதமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை கோயிலில்...

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை கோயிலில் வேலை! சம்பளம்:39,900 வரை! TNHRCE Chennai Recruitment 2025

TNHRCE Chennai Recruitment 2025: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், திருவலகு, பரிசாரகர் / சுயம்பாகி பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 07.03.2025 பிற்பகல் 05.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
காலியிடங்கள்07
பணிகள்அலுவலக உதவியாளர், இரவு காவலர்,
திருவலகு, பரிசாரகர் / சுயம்பாகி
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி07.03.2025
பணியிடம்சென்னை,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hrce.tn.gov.in/

சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

வேலை பெயர்காலியிடம்
அலுவலக உதவியாளர்01
இரவு காவலர்01
திருவலகு04
பரிசாரகர் / சுயம்பாகி01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரவு காவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பரிசாரகர் / சுயம்பாகி பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். கோயில் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

திருவலகு பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வேலை பெயர்வயது வரம்பு
அலுவலக உதவியாளர்18 முதல் 45 வயது வரை
இரவு காவலர்18 முதல் 45 வயது வரை
திருவலகு18 முதல் 45 வயது வரை
பரிசாரகர் / சுயம்பாகி18 முதல் 45 வயது வரை
வேலை பெயர்சம்பள விவரம்
அலுவலக உதவியாளர்ரூ.12,600 to ரூ.39,900 வரை
இரவு காவலர்ரூ.11,600 to ரூ.36,800 வரை
திருவலகுரூ.10,000 to ரூ.31,500 வரை
பரிசாரகர் / சுயம்பாகிரூ.13,200 to ரூ.41,800 வரை

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பப் படிவத்தை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் குறிப்பிட்ட பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு “செயல் அலுவலர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை-29” என்ற முகவரிக்கு நேரிலோ / தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.35 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.03.2025 பிற்பகல் 5.45 மணிக்குள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை-29

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments