Tuesday, May 20, 2025
Home8th Pass Govt Jobs8வது தேர்ச்சி போதும் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை - சம்பளம்: ரூ.12,000...

8வது தேர்ச்சி போதும் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை – சம்பளம்: ரூ.12,000 || தேர்வு கிடையாது! Chennai OSC Recruitment 2025

Chennai OSC Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் – பெண்கள் உதவி மையத்தில் காலியாக உள்ள 03 பாதுகாவலர் (Security Guard), பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த சேவை மையத்தினை அமைக்க ஒரு புதிய திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அதன்படி சென்னை ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, காவல்துறை, சட்டம், உளவியல் மற்றும் தற்காலிக தங்குமிட வசதியினை ஆதரவு தேவையுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையம்
(One Stop Centre)
பெண்கள் உதவி மையம் (181)
காலியிடங்கள்03
பணிகள்பாதுகாவலர் (Security Guard)
பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி30.04.2025
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://chennai.nic.in/

தமிழ்நாடு அரசு சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பின்வரும் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாதுகாவலர் (Security Guard) பதவிக்கு ஒரு (01) காலியிடமும், பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) பதவிக்கு இரண்டு (02) காலியிடங்களும் உள்ளன. இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பதவி பெயர்காலியிடங்கள்
பாதுகாவலர் (Security Guard)01
பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper)02

பாதுகாவலர் (Security Guard):

  • அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூர்வாசகராக இருக்க வேண்டும்.
  • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper):

  • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஏதாவது அலுவலகத்தில் பராமரிப்பாளராக (House Keeping) பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்பவர்களுக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும்.
  • உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் விவரங்கள்

பணியிடம்: ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம்.

தமிழ்நாடு அரசு சென்னை ஒருங்கிணைந்த சேவை மையம் பாதுகாவலர் (Security Guard) & பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) பதவிக்கு பணியிடம்: ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம்.

சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பாதுகாவலர் (Security Guard) பணிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ₹ 12,000/- வழங்கப்படும்.

பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) பணிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ₹ 10,000/- வழங்கப்படும்.

இந்த வேலைவாய்ப்புகளுக்கான தேர்வு செயல்முறை தகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் சிறப்பாக செயல்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணி வழங்கப்படும்.

இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பக் கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து விண்ணப்பதாரர்களும் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் விண்ணப்பிக்கலாம்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் https://chennai.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து 30.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை – 01.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும். இது தொடர்பான அரசின் முடிவே இறுதியானது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments