Chennai OSC Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் – பெண்கள் உதவி மையத்தில் காலியாக உள்ள 03 பாதுகாவலர் (Security Guard), பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த சேவை மையத்தினை அமைக்க ஒரு புதிய திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அதன்படி சென்னை ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, காவல்துறை, சட்டம், உளவியல் மற்றும் தற்காலிக தங்குமிட வசதியினை ஆதரவு தேவையுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Chennai OSC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பெண்கள் உதவி மையம் (181) |
காலியிடங்கள் | 03 |
பணிகள் | பாதுகாவலர் (Security Guard) பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 30.04.2025 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennai.nic.in/ |