Chennai DCPU Recruitment 2025: தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலியாகவுள்ள கணக்காளர் (Accountant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Chennai DCPU Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம் |
வேலை பெயர் | கணக்காளர் (Accountant) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 17.02.2025 |
பணியிடம் | சென்னை,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennai.nic.in/ |
Chennai DCPU Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- கணக்காளர் (Accountant)
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN DCPU Recruitment 2025 கல்வித் தகுதி
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் கணக்காளர் (Accountant) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் (Commerce) / கணிதம் (Mathematics ) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 வருட அனுபவம். மற்றும் கணினி திறன் மற்றும் Tally சாஃப்ட்வேர் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் கணக்காளர் (Accountant) பணிக்கு விண்ணப்பிக்கும் தேதியின்படி வயது அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செயல்முறை
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Chennai DCPU Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்ப படிவம் மற்றும் தகுதி அளவுகோல்களை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
➤ மேற்கண்ட பதவிக்கு தகுதியானவர்கள் தங்களது புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தையும், தேவையான சுய சான்றளிக்கப்பட்ட நகல்களையும் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் செய்தி வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் அதாவது 17.02.2025 தேதி மாலை 5:45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை – தெற்கு, நீலம், 1-வது தளம், நியூ ஸ்ட்ரீட், ஜி.சி.சி கமர்ஷியல் காம்பெக்ஸ், ஆலந்தூர், சென்னை – 600016 (ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு அருகில்)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.02.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2025