Wednesday, July 16, 2025
Home8th Pass Govt Jobsதமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாடு அரசு கோவில்களில் வேலை ! - ரூ.12600...

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாடு அரசு கோவில்களில் வேலை ! – ரூ.12600 சம்பளம் || தேர்வு கிடையாது! TNHRCE Recruitment 2025

TNHRCE Recruitment 2025: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்டம், எழும்பூரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலியாக உள்ள 10 அலுவலக உதவியாளர்,இரவு காவலர்,மேலாளர்,அர்ச்சகர்,பரிசாரகர்,திருவலகிடுவோர்,பகல் காவலர் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 09.06.2025 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
சென்னை அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்
காலியிடங்கள்10
பணிகள்அலுவலக உதவியாளர்,இரவு காவலர்,
மேலாளர்,அர்ச்சகர்,பரிசாரகர்,
திருவலகிடுவோர்,பகல் காவலர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி09.06.2025 மாலை 5.45 மணி
பணியிடம்சென்னை,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hrce.tn.gov.in/

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025 சென்னை மாவட்டம், எழும்பூரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
மேலாளர்1
பரிசாரகர்1
அலுவலக உதவியாளர்1
அர்ச்சகர்1
பகல் காவலர்1
இரவு காவலர்1
திருவலகிடுவோர்1
இரவு காவலர்1
திருவலகிடுவோர்1
திருவலகிடுவோர்1
பதவியின் பெயர்கல்வி தகுதி
அலுவலக உதவியாளர்குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பகல் காவலர்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
இரவு காவலர்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகிடுவோர்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
இரவு காவலர்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகிடுவோர்
(அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், எழும்பூர், சென்னை – 08)
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகிடுவோர்
(முத்துமாரியம்மன் திருக்கோயில், கீழ்ப்பாக்கம், சென்னை – 10)
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
பரிசாரகர்1) சைவ ஆகமப் பயிற்சி மற்றும் பூஜை முறைகள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
2) உணவுப் பொருட்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நறுமணத்துடனும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அர்ச்சகர்1) தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
2) ஏதேனும் ஆகம பள்ளி (அ) அரசு சார்ந்த வேத பாடசாலைகளில் ஆகம பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 10.05.2025-ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்சம்பள விவரம்
மேலாளர்18 முதல் 45 வயது வரை
பரிசாரகர்18 முதல் 45 வயது வரை
அலுவலக உதவியாளர்18 முதல் 45 வயது வரை
அர்ச்சகர்18 முதல் 45 வயது வரை
பகல் காவலர்18 முதல் 45 வயது வரை
இரவு காவலர்18 முதல் 45 வயது வரை
திருவலகிடுவோர்18 முதல் 45 வயது வரை
இரவு காவலர்18 முதல் 45 வயது வரை
திருவலகிடுவோர்18 முதல் 45 வயது வரை
திருவலகிடுவோர்18 முதல் 45 வயது வரை
பதவியின் பெயர்சம்பள விவரம்
மேலாளர்ரூ.15300 – ரூ.48700 வரை
பரிசாரகர்ரூ.13200 – ரூ.41800 வரை
அலுவலக உதவியாளர்ரூ.12600 – ரூ.39900 வரை
அர்ச்சகர்ரூ.11600 – ரூ.36800 வரை
பகல் காவலர்ரூ.11600 – ரூ.36800 வரை
இரவு காவலர்ரூ.11600 – ரூ.36800 வரை
திருவலகிடுவோர்ரூ.10000 – ரூ.31500 வரை
இரவு காவலர்ரூ.10700 – ரூ.33700 வரை
திருவலகிடுவோர்ரூ.6900 – ரூ.21500 வரை
திருவலகிடுவோர்ரூ.6900 – ரூ.21500 வரை

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox Copy Only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று அல்லது கல்வி நிலையத்தில் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 09.06.2025 மாலை 5.45 மணிக்குள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டுச் “செயல் அலுவலர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், எண். 6, எம்.என்.பி. கோயில் தெரு, எழும்பூர், சென்னை – 8.” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ. 35-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடன் அஞ்சல் உறையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும் கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments