Thursday, February 6, 2025
HomeAny Degree Govt Jobsதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை; தேர்வு கிடையாது - சம்பளம்: ரூ.27,804 ||...

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை; தேர்வு கிடையாது – சம்பளம்: ரூ.27,804 || உடனே விண்ணப்பிக்கவும் Ariyalur DCPU Recruitment 2025

Ariyalur DCPU Recruitment 2025: தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலியாகவுள்ள பாதுகாப்பு அலுவலர் (Protection Officer), சமூகப்பணியாளர் (Social Worker) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்அரியலூர் மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலகு அலுவலகம்
காலியிடங்கள்03
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி14.02.2025
பணியிடம்அரியலூர்,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ariyalur.nic.in/

தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

வேலை பெயர்காலியிடம்
பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)01
சமூகப்பணியாளர் (Social Worker)70

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பாதுகாப்பு அலுவலர் கல்வி தகுதி:

முதுகலையில் (Recognized University) சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / குழந்தைகள் வளர்ச்சி (Child Development) / மனித உரிமை (Human Rights Public Administration) / உளவியல் (Psychology) / மனநலம் (Psychiatry) / சட்டம் (Law) / பொது சுகாதாரம் (Public Health) / சமூக வள மேலாண்மை (Community Resource Management) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.

அல்லது

இளங்கலையில் (Recognized University) சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / குழந்தைகள் வளர்ச்சி (Child Development) / மனித உரிமை (Human Rights Public Administration) / உளவியல் (Psychology) / மனநலம் (Psychiatry) / சட்டம் (Law) / பொது சுகாதாரம் (Public Health) / சமூக வள மேலாண்மை (Community Resource Management) / பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி களப்பணியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை (Implementation, monitoring and supervising in the preferably in the field of Women & Child Development) / சமூகநலம் (Social Welfare) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும் மற்றும் திட்டங்கள் உருவாக்குவதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராகவும் மேலும் கணினி இயக்குவதில் திறமை வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.

சமூகப்பணியாளர் கல்வி தகுதி:

இளங்கலையில் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் (Recognized University) சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Sciences) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

சமூகப்பணியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

பாதுகாப்பு அலுவலர் பணிக்கு இப்பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ஒரு மாதத்திற்கு – ரூ.27,804/- வழங்கப்படும்.

சமூகப்பணியாளர் பணிக்கு இப்பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ஒரு மாதத்திற்கு – ரூ.18,536/- வழங்கப்படும்

தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பத்தினை https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பதாரர் கையொப்பமிட்டு தங்களது புகைப்படம் ஒட்டியுள்ள விண்ணப்பத்தை பதிவு தபால் மூலம் அல்லது நேரில் 14.02.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்-621704. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 1 மேலும் பதவி குறித்த தகவல்களுக்கு மிசன் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமெனவும், மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்-621704

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.01.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments