Trichy DCPU Recruitment 2025: தமிழ்நாடு அரசு மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மையத்தில் காலியாகவுள்ள 06 மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் வழக்குப் பணியாளர் (Case Worker) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Trichy DCPU Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
வேலை பெயர் | மேற்பார்வையாளர், வழக்குப் பணியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 24.09.2025 |
பணியிடம் | திருச்சி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruchirappalli.nic.in/ |
Tamilnadu DCPU Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
வழக்குப் பணியாளர் (Case Worker) | 03 |
மேற்பார்வையாளர் (Supervisor) | 03 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Trichy DCPU Recruitment 2025 கல்வித் தகுதி
பதவி பெயர் | கல்வி தகுதி |
வழக்குப் பணியாளர் (Case Worker) | 12-ம் வகுப்பு தேர்ச்சி, தகவல் தொடர்பு திறன் |
மேற்பார்வையாளர் (Supervisor) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ சமூகம் சார்ந்த சமூகவியல்/ சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் திறமை பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது, விண்ணப்பத் தேதியின்படி அவர்களின் வயது 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
வழக்குப் பணியாளர் (Case Worker) | மாதம் ₹18,000 |
மேற்பார்வையாளர் (Supervisor) | மாதம் ₹21,000 |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 10.09.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2025
Trichy DCPU Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மையம் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruchirappalli.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, முதல் தளம், மெக்டொனால்ட் ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |