Coimbatore Social Welfare Recruitment 2025: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் செயல்படும் பெண்களுக்கான உதவி எண் அழைப்பு 181 (Women Help Line) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலியாக உள்ள பல்வேறு Multi Purpose Helper, Case Worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Coimbatore Social Welfare Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழக அரசு பெண்கள் உதவி எண் 181 |
காலியிடங்கள் | பல்வேறு |
பணிகள் | Multi Purpose Helper, Case Worker |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 30.06.2025 |
பணியிடம் | தமிழ்நாடு – கோயம்புத்தூர் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | coimbatore.nic.in |
Coimbatore Social Welfare Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணிகள் | காலியிடங்கள் |
பணி ஒருங்கிணைப்பாளர் (Case Worker) | பல்வேறு |
பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) | பல்வேறு |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Coimbatore Social Welfare Recruitment 2025 கல்வித் தகுதி
பதவி | கல்வித் தகுதி |
பணி ஒருங்கிணைப்பாளர் (Case Worker) | முதுகலை சமூகப் பணி (MSW), M.A./M.Sc. சமூகவியல், M.A./M.Sc. உளவியல் / மருத்துவ உளவியல். (பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.) |
பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள். (24 மணி நேர சேவை வழங்குவதற்காக பணி சுழற்சி அடிப்படையில் இருக்கும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.) |
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் 30.06.2025 அன்று அல்லது அதற்கு முன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது சுய சான்றொப்பமிட்ட நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Tamilnadu Social Welfare Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
வயது வரம்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியான 30.05.2025 அன்று விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Tamilnadu Social Welfare Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பதவி | மாதச் சம்பளம் |
பணி ஒருங்கிணைப்பாளர் (Case Worker) | ரூ. 18,000/- |
பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) | ரூ. 10,000/- |
Tamilnadu Social Welfare Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
Coimbatore Social Welfare Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 -பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை திருச்சி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான coimbatore.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 03.05.2025 முதல் 30.06.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: District Social Welfare Officer, District Collectorate Campus, Old Building, Ground Floor, Coimbatore 641018
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |